UNLEASH THE UNTOLD

Tag: Temple

 கனவு தேசமா, மர்ம தேசமா?

இதுவரை உலகில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகப்பெரிதான அங்கோர்வாட், உலகின் எட்டாவது அதிசயம் எனப் பேச்சுக்குச் சொல்லப்பட்டாலும், உண்மையில் காண்போர் மனதைக் கவரும் முதல் அற்புதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். நான் பார்த்த வரையில் அழகால் மயக்கும் தாஜ்மஹாலையும், பகட்டாக எழும்பி நிற்கும் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கையும் பின்னுக்குத் தள்ளி விட்டு என் மனதில் முதலிடத்தில் வந்து நிற்பவை அங்கோர்வாட் கோயில்களே. யுனெஸ்கோவினால், உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, காலம் கடந்து நிற்கும் அந்தச் சிற்ப உலகிற்குள் நுழைந்த நொடியில் என் கனவு தேசம், மர்மதேசமாக மாறியதைப் போன்ற உணர்வு.

கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு அவசியமா?

திரையரங்கிற்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம். கோயிலுக்கு இப்படித்தான் வர வேண்டும் என்று இன்னொருவர் வாதாடுகிறார். திரையரங்கத்தில் கலாச்சாரம் கிடையாதா? அப்போது மட்டும் நாம் இந்தியாவைவிட்டு வெளியில் போய்விடுவோமா? அமெரிக்கப் பெண்கள் எல்லாம் இப்போது திருந்தி விட்டார்கள் என்று அறிவிக்கிறார் ஒருவர். அவர்கள் இங்கே வரும்போது சேலை அணிகிறார்கள் என்று பெருமை வேறு. நான் கேட்கிறேன். ஐயா… அவர்களுக்குச் சேலை ஒரு புதுமையான ஆடை அதனால் அதை அணிந்து பார்க்க விருப்பப்பட்டு அணிகிறார்கள். வருடம் 365 நாட்களும் சேலையே அணிய வேண்டும் என்று சொன்னால் அதை அப்படியே சுருட்டி உங்கள் முகத்தில்தான் வீசிவிட்டுப் போவார்கள்.

ஆலயப் பிரவேசமும் ஐஸ்வர்யாவும்

“கடவுளுக்கு ஆண், பெண் என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை. மேலும், என் கோயிலுக்கு இவர்கள் வரக் கூடாது, அவர்கள் வரக் கூடாது என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. அதேபோல, இதைச் சாப்பிடக் கூடாது, இது தீட்டு என்று எந்தக் கடவுளும் சொன்னதில்லை. இவையெல்லாம் நாம் உருவாக்கின சட்டங்கள்தாம்.