UNLEASH THE UNTOLD

Tag: Tamil Poem

எனது புதன்கிழமைகள் இப்படித்தான் இருக்கின்றன

நெடுஞ்சாலையை குறுக்காகக் கடக்கையில்
சிக்னல் பச்சையில் வாகனங்களை ஏவி விட்டு
ஹாரன்கள் கதற என்னைப் பதற வைத்து
வேடிக்கைப் பார்க்கின்றன

ஈரம் உதறும் பறவை

ஜன்னலில்
நனைந்த பறவையொன்று
வந்தமர்ந்து
இறகுகளின் ஈரம்
உதறிக்கொண்டிருக்க
எண்ண முடியாத
நரம்புகளின் வீணையாக
எல்லோருக்கும் ஆறுதலாக
இசைத்துக் கொண்டிருக்கிறது
வான்