UNLEASH THE UNTOLD

Tag: nenjukkul peithidum mamazhai

சாமியாடி என்ன சொன்னார்?

காலையில் அவளைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுப் போன அதே சாரதா அக்கா இவர் இல்லை என்று நினைத்த போதே அவள் கண்கள் சொருகின. மயங்கி விழப் போகிறாரோ என்று நினைத்ததற்கு மாறாக மெல்ல அவள் காதோரமாக வேறு யாருக்கும் கேட்காத வண்ணம் கிசுகிசுப்பான ஆனால் தீர்க்கமான குரலில் ஏதோ சொன்னார். அதைக் கேட்ட அவள் சர்வமும் ஒரு நொடியில் உறைந்தது.

கோயில் கொடை

அவள் எண்ணவோட்டத்தைத் தடுக்கும் விதமாக ஒலிப்பெருக்கியிலிருந்து, ‘பால்குடம் எடுக்கும் பக்தர்கள் உடனே கோயிலுக்கு முன்பாக வரும்படி விழாக்குழு சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். மேளதாளக் கலைஞர்கள் எங்கிருந்தாலும் உடனே விநாயகர் கோயில் முன்பாக வருமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பு தொடர்ந்தது.

மழையும் ரயிலும்

அவனுக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் எச்சரிக்கை விளக்கைப் பொருத்தியவாறு ஓடிவந்த சுகுமார் கையிலிருந்த சிவப்பு வெளிச்சமும், சிவாவின் முகத்தில் இருந்த பதற்றமும் தான் கணித்தது சரி என்று தோன்றியது.

கொட்டிய மழை...

“திருச்செந்தூர் முருகங் கோயில்லயும்  தண்ணில, எவனோ வீடியோ எடுத்து போட்டுருந்தான். கடல் அப்படியே கொந்தழிச்சுச்சு பாத்தியா? சுனாமி கினாமி வந்தாலும் வந்துருமோ?”

மகேஸ்வரி

அவள் ஏற்கனவே எவ்வளவோ செய்துவிட்டாள்‌. முதலில் அவள் கணவன் அடிக்கத் தொடங்கிய நாட்களில் ஓடிச் சென்று அவள் வீட்டில்தான் தஞ்சம் புகுவாள். ஆனால் அவள் கணவன் அவளை அங்கு தேடி வந்து அவளை வசைபாடியதோடு நில்லாமல் ஒருமுறை அவனைத் தடுத்து கைநீட்டிய அவள் கணவன் முத்துராசு அண்ணனோடு அவளைச் சேர்த்து அசிங்க அசிங்கமாக பேசவும், இனியும் அவர்களுக்கு அவளால் தொல்லை வரக்கூடாது என்று நினைத்து வீட்டோடு இருந்துவிட்டாள்.

ஈவ்லின்

“அப்பா எங்கேம்மா? நீதான் சண்ட போட்டுட்டு வந்துட்டியாமே? எதுக்குச் சண்ட போட்ட? எனக்கு அப்பா வேணும்” என்று தன்னைப் பாதுகாக்கத் தன் தந்தை தங்களுடன் இல்லாததற்கு அம்மாதான் காரணம் என்று எவ்வளவு சண்டையிட்டிருப்பாள்?

இசக்கிமுத்து

“எனக்காகப்பா ப்ளீஸ். இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி இங்க தங்கிக்கயேன். பாவம் அவருக்கு மேலுக்கு முடியலங்குறதால தானே கேக்குறேன்.  நீ அவரைப் போய்ப் பார்க்க வேண்டாம், ஏதும் பேசிக்கக்கூட வேண்டாம். டீவி ரூம்ல கிடக்குற கட்டில்ல படுத்துக்க போதும் ஏதும் அவசரம்னா” என்று இழுத்தவளுக்குத் தெரியும். அவசரம் என்றால்கூட கண்டிப்பாக அவனை அழைக்க மாட்டார் என்று. ஆனால் அதற்காக இந்த அடைமழையில் சளி, காய்ச்சல் வந்து கிடக்கும் அவரைத் தனியாக வைத்து விட்டுப் போக அவளுக்கு மனமில்லை.

ஆயிஷா

“பெரியவங்கன்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க ஹிரா. நம்ம அதெல்லாம் கண்டுக்காம வுட்ரணும்” என்று அவள் கணவன் சொல்லும் வார்த்தைகள் உண்மைதான் என்று அவன் சொல்லும் போது தோன்றும். எப்போதாவது வரும் அவரிடம் போய் ஏன் மல்லுக் கட்டிக்கொண்டு நிற்பானேன் என்று நினைத்து அவள் விலகிச் சென்றாலும் அவர் வேண்டுமென்றே சண்டை இழுப்பார்.

அபிநயா

“எம்மாடி… ரண்டு வருஷம் கண்ணு மூடி துறக்கதுக்குள்ள போயிரும். போனுலயே எங்க இருந்தாலும் நேருல பாத்து பேசிக்கலாமாமே. அதுல அடிக்கடி பாத்துகிட்டா போச்சி. நீ கலங்காம மவராசியா போயிட்டு வாடி என் ராஜாத்தி . உங்க தாத்தனும் இப்படித்தான் சிலோனுக்குப் போய் தொழில் பாத்தாவல்ல. அந்த வாரிசு இறங்காம இருக்குமா?” என்று தேற்றியவர், அவள் சென்றதும் வருத்தப்படுவார் என்று தெரியும். அவள் சென்னைக்கு படிக்கச் சென்ற போதே ஒரு வாரமாகச்  சரியாகச் சாப்பிடாமல் வருந்தினார் என்று அம்மா சொல்லியிருந்தார் .