UNLEASH THE UNTOLD

Tag: Nakshatra

கொடுமைகளுக்கு முடிவு எப்போது வரும்?

பெண் குழந்தையின் வாழ்வு என்பது கேள்வி குறியாக அல்லவா உள்ளது இத்தலை முறையில்.ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் படிக்கும்போது மனம் கனக்கிறது.பெண் என்கிற ஒற்றைக் காரணத்திற்காகக் குழந்தைப் பருவத்தில் இருந்து வயதான மூதட்டி வரை ஏதோ ஒரு கொடுமையை அன்பவித்துக் கொண்டிருப்பது வேதனை. பெண் என்றால் வீட்டைத் தாண்டினால் ஆபத்து என்கிற கட்டமைவு வைத்திருக்கும் இந்தச் சமுதாயம், யாரால் பெண்ணுக்கு ஆபத்து, சில ஆண்களால் தானே என்று கண் எதிரே கண்டும் உணர முடியாது குருடர்களாக, “பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளணும் “என்று அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறதே தவிர, அதற்கான தீர்வு கிட்டினபாடில்லை.

குடும்பத்திற்கு அப்பால் விரியும் பெண்ணின் உலகம்

பெண்ணின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். முதலில் அம்மாவின் சொல்படி கேக்க வேண்டும், அவர்கள் விருப்பப்படியே படிக்க வேண்டும், கைநீட்டிய ஆடவனை விருப்பமின்றியே திருமணம் செய்துகொள்ள வேண்டும், அப்புறம் தனக்கான கணவனைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சாமர்த்தியத்தை அவள் மாண்டு மடியும்வரை கடைப்பிடிக்க வேண்டும். பின் எல்லாவற்றின் சாட்சியமாக ஒரு குழந்தை, அதுவும் ஆண் வாரிசைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இப்போதைய தலைமுறைக்கு இது கடந்தகாலத்தின் நிழலாகத் தெரிந்தாலும் எனது தலைமுறையின் நிஜம் இதுதானே?