UNLEASH THE UNTOLD

சமூகம்

ஆடையா? அறியாமையா? எது சிக்கல்?

குடும்பத்துக்குள்ளேயே இருந்துகொண்டு தங்கள் சொந்தக் குடும்பத்துப் பெண்களுக்கே பாலியல் தொந்தரவுகள் கொடுத்த ஆண்கள் இங்கே இல்லையா?

வெறுப்பு விஷ விதைகளை ‘அன்பு’ எனும் ஆயுதத்தால் களைவோம்!

மனிதகுலம் என்று பெருமைப்பட்டுக்கொள்வதற்கு நம்மிடம் எதுவுமே இல்லை என்றே தோன்றுகிறது. உலகில் இதுவரை தோன்றிய உயிரினங்களில் அறிவார்ந்த சமூகமாக மனித இனம் அறியப்படுகிறது. ஆனால், நம் அறிவு அனைத்தையும் நமக்கெதிராகத்தான் நாம் பயன்படுத்துகிறோம் என்கிற அடிப்படை உணர்வுகூட இல்லாமல்தான் இந்த இனம் இருக்கிறது. நாம் என்றால் அது நம் மனித இனம் முழுவதையும்தான் குறிக்கும். நம்மைச் சூழ்ந்து இருக்கும் அத்தனை உயிர்களையும் நமக்கு அளிக்கப்பட்ட ஒன்றாக, நம் பயன்பாட்டுக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக நாம் எடுத்துக்கொள்கிறோம். இந்தச் சுயநலம், இயற்கையைச் சீண்டுவதில் தொடங்கி சக மனிதனைச் சீண்டுவதில் முடிகிறது. அனைத்து மதங்களும் ஓயாமல் போதிப்பது அன்பைத்தான்.

ஆடுவது சாமியா, மனிதனா?

அவருடைய அண்ணனும் சாமியாடுபவர். அவரும் தான் சாமியாடும் விஷயத்தை மறைத்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்தார். அவருடைய திருமணம் முடிந்த முதல் வருட திருவிழாவின் போது, கணவன் சாமியாடுவதைக் கண்ட, அவரது மனைவிக்கு அதிர்ச்சி. பெரிய சண்டை போட்டார். அதற்கு மேல் அவரால் என்ன செய்ய முடியும்? தாலி கட்டியாகிவிட்டது, வயிற்றிலோ பிள்ளை! சண்டையிட்டு ஓய்ந்தார், அவ்வளவுதான். இப்போது தமையன் வழியை தம்பியும் பின்பற்ற தயாராகிவிட்டார்.