UNLEASH THE UNTOLD

Tag: violence

நஞ்சை விதைக்கும் நாயகர்கள்

வெற்றிபெற்ற தொழில் அதிபராக இருக்கும் நாயகியின் திமிரை நாயகன் அடக்குவதும், தன்னை மணம் புரியக்கேட்கும் பெண்ணை அவமதிப்பதும், ஆனால், தான் இன்னொரு பெண்ணை ஸ்டாக்கிங் செய்வதைப் புனிதப்படுத்துவதும், வேலை எதுவுமின்றி அலைந்தாலும் தான் ஆண் என்பதால் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுப்பதும் அதை காதல் என்று வகைப்படுத்துவதும் காலம்காலமாக சினிமாவில் இயல்பாக்கப்பட்ட விஷயங்கள்.

அடிக்கிற கை அணைக்குமா?

உலகின் எண்பது நாடுகளில் உள்ள இருபத்தைந்து சதவீத மக்கள் ஆண் பெண்ணை அடிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் என்று ஐநா சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பாதிப்பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்றும், இது இயல்பான ஒன்று என்கிற மனநிலையிலும்தான் இன்னும் இருக்கின்றனர். முதல் முறை ஆண் கை ஓங்கும் போதே பெண் தனது ஆட்சேபத்தை வன்மையாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இதுவே வாடிக்கையாகிவிடும். கல்வி, வேலை, பொருளாதாரம் என்று எதுவும் ஆணுக்கு பெண்ணை அடிப்பது தவறென்று போதிக்காதது பெரிய ஆச்சரியம்தான். கணவன் என்றாலே அடிக்கும் உரிமையும் தன்னாலே வந்துவிடுவதாகப் பெரும்பாலான ஆண்களும் ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளிலேயே ஊறிக் கிடந்த பெண்களும் எண்ணிக்கொள்வது தவறென்று உணர்த்த வேண்டும்.

பெண்களே இப்பொழுதாவது பேசுங்கள்...

பெரும்பான்மை மக்கள்தாம் வெறுப்பரசியலைத் தடுக்க முடியும். குறிப்பாகப் பெண்கள். எல்லாக் கலவரங்களிலும் பெண்களே அதிகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் ஆண்களின் உடைமை என்கிற எண்ணமே அதன் அடிப்படை. கணவனின் காலைக் கழுவி இன்ஸ்டாவில் போஸ்ட் போடும் பெண்களே சற்றே நிமிர்ந்து பாருங்கள். பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கலாம். அது நிரந்தரம் அல்ல. கண்களைத் திறந்து நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பாருங்கள். வாயைத் திறந்து பேசுங்கள். யாரோ பெயர் தெரியாத மணிப்பூர் பெண்ணுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் நம் சந்ததிகளுக்ககாவும்.

மணிப்பூர் மகள்களுக்கு என்ன செய்யப் போகிறோம்?

ஓர் இனத்தை அவமானப்படுத்த அந்த இனத்தின் பெண்களை அசிங்கப்படுத்தும் யுத்தியைப் போல் ஒரு காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியுமா? தோற்றுப் போனவனின் பொன்னையும் மணிகளையும் கொள்ளையடிப்பதைப் போல், பெண்களையும் சூறையாடும் இது என்ன மாதிரியான உளவியல்?

மறுகன்னத்தைக் காட்டத்தான் வேண்டுமா?

எதிர்த்து நிற்க வேண்டும். நம் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். எந்த அடிப்படையிலும் தன்னைத் தாழ்ந்தவன், தாழ்த்தப்பட்டவன் என்று இனம்பிரிப்பதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள இயலாது. அதைப் போலவே இங்ஙனம் கட்டவிழும் வன்முறையைக் கண்டும் காணாமல் செல்ல இயலாது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை இனியும் காட்ட இயலாது. பிறரை அடிக்க முற்படும் முன் தன் கன்னத்தையும் அடிப்பவன் தயார் செய்துகொள்ளட்டும்.

மாணவர்கள் வன்முறை யார் பொறுப்பு?

40 ஆயிரம் அரசுப் பள்ளிகள் உள்ள நமது மாநிலத்தில் மிகச் சிறிய எண்ணிக்கையில் பத்துக்கும் குறைவாக வந்துள்ள இந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு மொத்தமாக அரசுப் பள்ளிகளே சரியல்ல என்ற கருத்தைப் பரவலாக்குவதும், 2 வீடியோக்களில் பெண் குழந்தைகளின் செயல்களை வைத்து பெண் பிள்ளைகளின் ஒழுக்கத்தை விமர்சிப்பதும் எந்த விதத்தில் சரி?