மொட்டையக்காவின் ஆண் குழந்தை
கறுப்பு,வெள்ளை, உயரம், குட்டை, பருமன், ஒல்லி என்று மனிதனுக்குள் எத்தனை எத்தனை உருவ வேறுபாடுகள்! ஐந்தறிவு இருப்பதால்தான் மிருகம் மனிதனாகவும் ஆறறிவு இருப்பதால் மனிதன் மிருகமாகவும் வாழ்கிறான் என்று எண்ணத் தோன்றுகிறது. குழந்தைகளின் மனத்தில் பதியும் இந்த எண்ணங்களே வளரும்போது தாழ்வு மனப்பான்மையாக மாறுகிறது. வளர்ந்த பிறகு, திருமண பந்தத்தில் தனக்கான துணையைத் தேர்வு செய்வதில் தோற்றுவிடுகின்றனர். அழகு என்பது ஒரு மனிதனின் பண்பில் உள்ளது என்பதை எப்பொழுது இந்தச் சமூகம் உணரப் போகிறது?