UNLEASH THE UNTOLD

Tag: Vadachennai Kaviyam

மொட்டையக்காவின் ஆண் குழந்தை

கறுப்பு,வெள்ளை, உயரம், குட்டை, பருமன், ஒல்லி என்று மனிதனுக்குள் எத்தனை எத்தனை உருவ வேறுபாடுகள்! ஐந்தறிவு இருப்பதால்தான் மிருகம் மனிதனாகவும் ஆறறிவு இருப்பதால் மனிதன் மிருகமாகவும் வாழ்கிறான் என்று எண்ணத் தோன்றுகிறது. குழந்தைகளின் மனத்தில் பதியும் இந்த எண்ணங்களே வளரும்போது தாழ்வு மனப்பான்மையாக மாறுகிறது. வளர்ந்த பிறகு, திருமண பந்தத்தில் தனக்கான துணையைத் தேர்வு செய்வதில் தோற்றுவிடுகின்றனர். அழகு என்பது ஒரு மனிதனின் பண்பில் உள்ளது என்பதை எப்பொழுது இந்தச் சமூகம் உணரப் போகிறது?

உங்களின் மழைக்காலம் உள்ளத்தைக் கொள்ளையடிக்கும்; எங்களின் மழைக்காலம் வாழ்க்கையைக் கொள்ளையடிக்கும்!

இன்றும் பொதுக் கழிவறைகளையும் தெரு ஓரங்களையும் பயன்படுத்தும் மக்கள் வடசென்னையில் உண்டு என்றால் நம் சமுதாய வளர்ச்சி எங்கே? இன்றும் இந்தியாவில் கழிவறைகள் இல்லாத வீடுகள் உண்டு என்றால், மங்கள்யான் செவ்வாய் கிரகத்தைச் சுற்றினால் என்ன? செவ்வாய் கிரகத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்பினால்தான் என்ன? முதலில் வாழும் கிரகத்தை, வாழ தகுதியான இடமாக மாற்றுவோம்.

பாறையாக மாறிய தேவதையின் மனம்

அவர்களின் நட்பைத் தவறாகத் திரித்து அனைவரும் பேச, ஒரு நாள் அவன் எல்லை மீறினான். பார்பவர்களின் நெஞ்சம் பதைக்க, ஒரு கண்ணில் ரத்தமும் மறு கண்ணில் கண்ணீருமாக அலறிக்கொண்டே, தரைத்தளம் நோக்கி ஓடினாள். அவளை வழிமறித்து மீண்டும் அடித்தான். மயங்கிய அவளை மீட்டு மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நலம் தேறினாள். மீண்டும் பழைய வாழ்க்கை.

வாழ்வதற்கு நம்பிக்கை கொடுக்கும் ரேகா!

தன் தாயின் போராட்டங்களைப் பார்த்து வளர்ந்த ரேகாவுக்கு வாழ்கை கடினமாகத் தோன்றவில்லை. காரணம், இந்த வாழ்க்கைக்கு அவள் பழகியவள். அம்மா, ஆயா இருவரின் சேமிப்புத் தொகையை வைத்து குழ்ந்தைகளை வளர்த்து வருகிறாள். அம்மாவின் வேலை தனக்குக் கிடைக்கும் என்று முயற்சி செய்தபோது, திருமணம் ஆன பெண்ணுக்கு அம்மாவின் அரசு வேலை வழங்கப்பட மாட்டாது என்று யாரோ கூறியதை நம்பி, அந்த முயற்சியையும் கைவிட்டாள். வேலைக்கு எப்படி முயற்சிப்பது என்று ரேகாவுக்கு மட்டும் அல்ல, இங்கு யாருக்கும் தெரிவது இல்லை. சட்டங்கள் மாறுவதும் மாற்றப்படுவதும் இங்கு வாழும் மக்களுக்குத் தெரிவதும் இல்லை, தெரியப்படுத்துவதற்கு ஆளும் இல்லை.

மாமியார் கங்கம்மாவும் மருமகள் சுலோக்சனாவும்

கங்கம்மா, “ஏம்மா, இன்னும் எத்தனை நாளுக்கு இப்படிக் கண்ணுல தண்ணியும் கையில புள்ளையுமா இருப்ப, புருசன் செத்து ஆறுமாசம் ஆச்சு, பொழப்ப பாக்க வேண்டாமா? நா சொல்றத கேளு, உன்ன மாறிதான் எம்பொழப்பும், சின்ன வயசுல தாலி அறுத்தவ தனியா வாழ முடியாதுமா. நா ஆம்புள புள்ளைய பெத்ததால பொழச்சேன். நீ பொம்பள புள்ளைய பெத்து இருக்க, தனியா வாழ முடியாது. புள்ளைய எங்கையில குடுத்துட்டு நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ. நா பட்ட கஷ்டம் உனக்கு வேணாம்டியம்மா. எங்க காலம் வேற , உனக்கு வாழ வேண்டிய வயசு உன் புள்ளைய நா வளத்து ஆளக்குறேன், நீயும் என்ன மாதிரி நரக வாழ்க்க வாழாத. ஊரும் வுலகமும் பேசும், ஆனா ஒதவாது நா சொல்றத கேளும்மா” என்றார்.

வடசென்னை காவியம்: பூக்காரர் குள்ளக்கா

அது என்ன பூ விற்கும் பெண்கள் குள்ளமாகத்தான் இருப்பார்களா? இல்லை, சற்றுக் குள்ளமாக உள்ள பெண்கள் பூக்காரர்களாக மாறிவிடுவார்களோ! அதுவும் நம் பூக்காரர் குள்ளக்கா என்ற அமுல்ராணி குள்ளத்திலும் குள்ளம்.