UNLEASH THE UNTOLD

Tag: tour

ஜாலி டூர் போவானா சிபி?

வெள்ளிக்கிழமை மாலை ட்ரெயின். ஒரு வாரமாகப் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கிறான் சிபி. தான் வீட்டில் இல்லாத நான்கு நாளைக்கும் ஆதிக்குத் தேவையான உடைகளை அயர்ன் பண்ணி வைத்தாயிற்று. குழந்தைக்கான ஸ்னாக்ஸ் என்ன கொடுக்க வேண்டும், லஞ்ச் என்ன கொடுக்க வேண்டும் என்று எழுதி ஃப்ரிஜ்ஜின் மீது ஓட்டி வைத்தான். என்னென்ன பொருள் எங்கெங்கு இருக்கிறது என்பது உட்பட. தோசை மாவு, அடை மாவு அரைத்து வைத்து சேஷாத்ரியின் உதவியுடன் வீடு முழுவதும் பளிங்கு போல் துப்புரவு செய்து, அழுக்குத் துணிகளை எல்லாம் துவைத்து மடித்து வைத்து, மாமா அத்தைக்குத் தேவையான மாத்திரைகள் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்து இல்லாததை வாங்கி வைத்து, அப்பப்பா…

பூகோள எல்லைகளைத் தகர்த்த ஈழமும் தமிழகமும்

சமூகத்தைப் பிரதிபலிக்கக்கூடிய சினிமாவால் இரு நாடுகளுக்கிடையேயான இணக்கம் இன்னும் அதிகமானது. இலங்கை, தமிழ் சினிமாவுக்குத் தந்த ஒவ்வொருவரும் மாணிக்கப் பரல்கள்தாம். இலங்கையின் நாவல்பட்டியில் பிறந்து வளர்ந்த எம்ஜிஆரின் கையில் தன்னையே கொடுத்து மகிழ்ந்தது தமிழகம். (அதே நேரம், ஈழப்போருக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற ஆதரவு உலகமே அறிந்தது). மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற கிராமத்தின் பாலுமகேந்திரா தென்னிந்திய திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத ஆளுமையானார். யாழ்ப்பாணம் அருகே நெல்லிப்பழையைச் சேர்ந்த சுஜாதாவின் திறமையைத் தமிழ், மலையாள சினிமாக்கள் பயன்படுத்திக்கொண்டன. கொழும்பில் பிறந்த ராதிகா தான் இன்றைக்குச் சின்னத்திரையின் ராணி. ஜே.ஜே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா உமாசங்கரும் சிங்களத்துப் பைங்கிளிதான். மன்னாரில் பிறந்த கேத்தீஸ்வரன் தமிழ் சினிமாவின் போண்டாமணியாக உருவெடுத்தார். ஏன், சமீபத்திய லாஸ்லியாவும் தர்ஷனும்கூட பிக்பாஸ் வழியாகக் கிடைத்த இலங்கை வரவுகள்தாம்.