UNLEASH THE UNTOLD

Tag: tour

குழந்தைகளை பள்ளி சுற்றுலாவுக்கு அனுப்புங்கள்!

அன்று பள்ளி முடித்து வந்தும், அடுத்த வாரம் ஒருநாள் வெளியே கூட்டிட்டுப் போகிறார்கள் என்று அப்பாவிடம் சொன்னேன். பெரும்பாலான நாட்கள் பள்ளி முடிந்து வரும் போது அப்பாதான் வீட்டில் இருந்து சிற்றுண்டி, பால் தயார் செய்து தருவார். அப்படி இல்லை என்றால் பக்கத்து வீட்டில் சாவி இருக்கும். நானும் அக்காவும் அங்கே இருப்போம். அப்பா, அம்மா வந்ததும் பேசிட்டுச் சொல்றேன் என்றார். இருவரும் போகலாம் என்று அனுமதி கொடுத்ததும் மறுநாள் பள்ளியில் என் பெயர் கொடுத்து விட்டேன்.

டூர் அவ்வளவுதானா?

அருண் தவியாகத் தவித்தபடி இருந்தான். ட்ரெயினுக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் ஸ்டேஷனுக்குப் போய் ட்ரெய்னைப் பிடிக்க வேண்டுமானால் இப்போது கிளம்பினால்தான் முடியும். ஏற்கெனவே இரண்டு கேப் கேன்சல் செய்துவிட்டுக் கிளம்பி விட்டார்கள்.

“அகிலா… டைம் ஆகுது…”

அகிலா திரும்பி முறைத்தாள். அப்பாவுடன் பேசும் போது யாரும் குறுக்கிடக் கூடாது. ‘வரேன் போ’ என்று சமிக்ஞையை ஆறாவது முறையாகச் செய்தாள்.

அத்தனைக்கும் ஆசைப்படு...

மலேசியா ஏர்போர்ட்டில் ட்ரான்சிட். ப்ளைட் மாறுவதற்காக டிக்கெட் ப்ளஸ் விசா செக்கிங் இடத்தில் கெக்கேபிக்கேவென சிரித்துக்கொண்டே வரிசையில் நிற்க, மல்லிகா அக்கா அவரது மகள் ஆனந்தி இரண்டுபேரை மட்டும் தனியாக தள்ளிக்கொண்டு போனார்கள். காரணம் கேட்டு பின்னாடியே ஓடினேன். “உங்கள் இருவருடைய விசாவிலும் சென்றடையும் இடம் ஹோ சி மின் சிட்டி, சீ போர்ட் ( Ho Chi Min City, Seaport) என்று இருக்கிறது. அதாவது நீங்கள் கடல் மார்க்கமாகச் செல்வதற்குத்தான் விசா எடுத்திருக்கிறீர்கள். ஆகாய மார்க்கமாக நீங்கள் செல்ல முடியாது, உங்களுக்கு விசா எடுத்துக் கொடுத்த ட்ராவல் ஏஜெண்ட்டைத் தொடர்பு கொள்ளுங்கள்.”

ஜாலி டூர் போவானா சிபி?

வெள்ளிக்கிழமை மாலை ட்ரெயின். ஒரு வாரமாகப் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கிறான் சிபி. தான் வீட்டில் இல்லாத நான்கு நாளைக்கும் ஆதிக்குத் தேவையான உடைகளை அயர்ன் பண்ணி வைத்தாயிற்று. குழந்தைக்கான ஸ்னாக்ஸ் என்ன கொடுக்க வேண்டும், லஞ்ச் என்ன கொடுக்க வேண்டும் என்று எழுதி ஃப்ரிஜ்ஜின் மீது ஓட்டி வைத்தான். என்னென்ன பொருள் எங்கெங்கு இருக்கிறது என்பது உட்பட. தோசை மாவு, அடை மாவு அரைத்து வைத்து சேஷாத்ரியின் உதவியுடன் வீடு முழுவதும் பளிங்கு போல் துப்புரவு செய்து, அழுக்குத் துணிகளை எல்லாம் துவைத்து மடித்து வைத்து, மாமா அத்தைக்குத் தேவையான மாத்திரைகள் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்து இல்லாததை வாங்கி வைத்து, அப்பப்பா…

பூகோள எல்லைகளைத் தகர்த்த ஈழமும் தமிழகமும்

சமூகத்தைப் பிரதிபலிக்கக்கூடிய சினிமாவால் இரு நாடுகளுக்கிடையேயான இணக்கம் இன்னும் அதிகமானது. இலங்கை, தமிழ் சினிமாவுக்குத் தந்த ஒவ்வொருவரும் மாணிக்கப் பரல்கள்தாம். இலங்கையின் நாவல்பட்டியில் பிறந்து வளர்ந்த எம்ஜிஆரின் கையில் தன்னையே கொடுத்து மகிழ்ந்தது தமிழகம். (அதே நேரம், ஈழப்போருக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற ஆதரவு உலகமே அறிந்தது). மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற கிராமத்தின் பாலுமகேந்திரா தென்னிந்திய திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத ஆளுமையானார். யாழ்ப்பாணம் அருகே நெல்லிப்பழையைச் சேர்ந்த சுஜாதாவின் திறமையைத் தமிழ், மலையாள சினிமாக்கள் பயன்படுத்திக்கொண்டன. கொழும்பில் பிறந்த ராதிகா தான் இன்றைக்குச் சின்னத்திரையின் ராணி. ஜே.ஜே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா உமாசங்கரும் சிங்களத்துப் பைங்கிளிதான். மன்னாரில் பிறந்த கேத்தீஸ்வரன் தமிழ் சினிமாவின் போண்டாமணியாக உருவெடுத்தார். ஏன், சமீபத்திய லாஸ்லியாவும் தர்ஷனும்கூட பிக்பாஸ் வழியாகக் கிடைத்த இலங்கை வரவுகள்தாம்.