உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்...
தேடலைத் தனக்குள் ஆரம்பிக்கும் பயிற்சி கைவந்துவிட்டால் வானமே உங்கள் வசம்தான். மனம் உணர்வு கொந்தளிப்பில் இருக்கும் போதெல்லாம், உணர்வை விட்டுவிட்டு நாம் நம்மில் மூழ்கி விட ஆரம்பிப்போம்.
தேடலைத் தனக்குள் ஆரம்பிக்கும் பயிற்சி கைவந்துவிட்டால் வானமே உங்கள் வசம்தான். மனம் உணர்வு கொந்தளிப்பில் இருக்கும் போதெல்லாம், உணர்வை விட்டுவிட்டு நாம் நம்மில் மூழ்கி விட ஆரம்பிப்போம்.
சில சமயம் கணவர், பிள்ளைகளுக்கும் அது நீண்ட களைப்பான நாளாக இருந்திருக்கலாம். நீங்கள் திறந்த மனதுடன் பேச முன்வரும்போது அவர்களுக்கான பிரச்னையும் புரியும். அதற்கேற்றபடி அந்த வேலைகளைப் பிரித்துக் கொள்ளும் போது, அனைவருமே ஒரு நல்ல மனநிலையில் இருக்க முடியும். இங்கு மட்டுமல்ல எப்போதுமே செய்யும் வேலை முக்கியமல்ல, வேலை செய்யும் போது நம் மன நிலைதான் முக்கியம்.
நாம் எப்போதும் புதிதாக யோசிப்பதாலும், புதிதாகத் தேடிக்கொண்டே இருப்பதாலும் மூளை சுறுசுறுப்பாகவும் மூளை சுருங்குதல், மறதி நோய் போன்ற தாக்கங்கள் இன்றி ஆரோக்கியமாகவும் இருக்கும். சவால்களை ரசியுங்கள், எதையும் குழந்தையின் ஆர்வத்தோடு அணுகுங்கள், தெரியாததை, புரியாததை நேர்மையாக ஒத்துக்கொண்டு கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஆழமாகக் கற்க முனையுங்கள், கொஞ்சம் உங்களின் கற்பனைச் சிறகை விரிக்க விரிக்க புதிய புதிய சிந்தனைகள் உருவாவதை நீங்களே உணர முடியும்.