UNLEASH THE UNTOLD

Tag: R. Ponnammal

துயரத்திலிருந்து என்னை மீட்டது எழுத்து! - ஆர். பொன்னம்மாள்

எனக்கு 19 வயது இருக்கும் போது தமிழ்நாடு என்கிற பத்திரிகை நடத்திய ஒரு கதைப் போட்டியின் அறிவிப்பைப் பார்த்தேன். ஒரு கதை எழுதி போட்டிக்கு அனுப்பினேன். இரட்டைப்பரிசு எனும் அந்தக் கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. அதைப் பார்த்ததும் வானில் இறக்கைக் கட்டிப் பறப்பது போல் இருந்தது. அந்தக் கதைக்குப் பத்து ரூபாய் பரிசாகக் கொடுத்தார்கள். அந்த நாட்களில் அது பெரிய பணம். அதுவும் எம்.எஸ். சுப்புலட்சுமி கையால் எனக்கு அந்தப் பரிசு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆக எனக்குமே இரட்டைப்பரிசுதான்.