UNLEASH THE UNTOLD

Tag: Nivethitha Louis

கருத்தடை மாத்திரைகளுக்குத் தடை கூடாது - அர்ச்சனா சேகர்

நம் சமூகத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது பெரிய சாதனை போலப் பார்க்கப்படுகிறது. எனவே பெண்களுமேகூட ஒரு குழந்தை பெற்ற பிறகே இசிபி பயன்படுத்துகிறார்கள். நான் ஏற்கெனவே சாதித்துவிட்டேன். இன்னொரு முறை சாதனை செய்ய விருப்பம் இல்லை என்பதுபோல. குழந்தை பெற்றவர்களிடம் இசிபி மாத்திரை பயன்படுத்துவது பற்றிய கூச்சம் அல்லது அவமான உணர்வு இல்லை. ஆனால், முதல் குழந்தையே வேண்டாம் என்று சொல்லக் கூச்சம் வருகிறது. உடல்நலம் மற்றும் பொருளாதாரக் காரணங்களினால் மூன்றாவது வேண்டாம் என்று சொல்ல வராத தயக்கம் முதல் கருவை வேண்டாம் எனச் சொல்லும்போது வந்துவிடுகிறது.

நம் பயணத்துக்கு உற்சாகமூட்டும் ஒரு விருது!

ஹெர்ஸ்டோரீஸ் ஃபேஸ்புக், இணையதளம் தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் இந்த விருது கிடைத்திருக்கிறது என்பது நாம் சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.