UNLEASH THE UNTOLD

Tag: Manipur

பெண்களே இப்பொழுதாவது பேசுங்கள்...

பெரும்பான்மை மக்கள்தாம் வெறுப்பரசியலைத் தடுக்க முடியும். குறிப்பாகப் பெண்கள். எல்லாக் கலவரங்களிலும் பெண்களே அதிகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் ஆண்களின் உடைமை என்கிற எண்ணமே அதன் அடிப்படை. கணவனின் காலைக் கழுவி இன்ஸ்டாவில் போஸ்ட் போடும் பெண்களே சற்றே நிமிர்ந்து பாருங்கள். பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கலாம். அது நிரந்தரம் அல்ல. கண்களைத் திறந்து நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பாருங்கள். வாயைத் திறந்து பேசுங்கள். யாரோ பெயர் தெரியாத மணிப்பூர் பெண்ணுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் நம் சந்ததிகளுக்ககாவும்.

மணிப்பூர் மகள்களுக்கு என்ன செய்யப் போகிறோம்?

ஓர் இனத்தை அவமானப்படுத்த அந்த இனத்தின் பெண்களை அசிங்கப்படுத்தும் யுத்தியைப் போல் ஒரு காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியுமா? தோற்றுப் போனவனின் பொன்னையும் மணிகளையும் கொள்ளையடிப்பதைப் போல், பெண்களையும் சூறையாடும் இது என்ன மாதிரியான உளவியல்?