பொருளாதாரச் சுதந்திரமும் பெண்விடுதலையும்
திருமணத்திற்குப் பிறகு எத்தனை பெண்களால் தன் பெற்றோர்களுக்குப் பிறந்த வீட்டிற்குப் பொருளாதார உதவியைத் தொடர்ந்து செய்துவிட முடிகிறது? பாலின சமத்துவத்தில் மிக முக்கியமானது பெண்களின் பொருளாதாரச் சுதந்திரமே.
இந்தியாவைப் பொருத்தவரை 24 சதவீதப் பெண்கள் மட்டுமே ஊதியம் பெறும் பணிகளில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. நுட்பமாகச் சிந்தித்தால் பல பெண்களும் பணிபுரிகிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டுமே முறையான ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.