UNLEASH THE UNTOLD

Tag: cancer

புற்றுநோயும் பெண்களும்

பெண்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான புற்றுநோய் என்றால் அது மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்தான். இந்தப் புற்றுநோயைத் தவிர்ப்பதற்கு பேப் டெஸ்ட் போன்ற பரிசோதனைகளை மருத்துவமனைக்குச் சென்று செய்து கொள்ளும் அவசியமில்லை. வீட்டிலேயே மார்பக சுய பரிசோதனை செய்வதன் மூலம் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும்.‌ மார்பகத்தில் ஏற்படும் கட்டி, எலியைப் போல உருண்டோடும் breast mouse கட்டிகள், மார்பகத்தைச் சுற்றி ஏற்படும் செதில்கள், மார்பகத்தைச் சுற்றி இருக்கும் பகுதி சிவந்து இருத்தல்‌, இரு மார்பகங்களும் வழக்கத்துக்கு மாறாக ஒன்றோடு மற்றொன்று ஒப்பிட்டுப் பார்க்கையில் வித்தியாசமான அளவில் இருப்பது, மார்பு காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை அனைத்தும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள்.

புற்றுநோய்களும் சிகிச்சை வகைகளும்

இந்த கீமோதெரபி மருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால்தான் இதனை பல நாட்கள் இடைவெளி விட்டுக் கொடுப்பார்கள். ஏனெனில் இடையில் சாதாரண செல்கள் நன்றாகச் செயல்பட சில நாட்கள் தேவைப்படும். இதில் உள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், இரு வேறு நபர்களுக்கு ஒரே வகையான புற்றுநோய் , அதாவது நுரையீரல் புற்று நோய் இருக்கலாம். ஆனால், இருவருக்கும் ஒரே வகையான கீமோ தெரபி இருக்காது. ஒவ்வொருவருக்கும் அவரின் தன்மை பொறுத்துப் புற்றுநோய் சிகிச்சை வேறுபடும். ஒரேவகை புற்றுநோய் எத்தனை பேருக்கு வந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தன்மை பொருத்து சிகிச்சை தன்மை வேறுபடும். இரண்டு புற்றுநோய்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு தனிப்பட்ட புற்றுநோய்க்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ளன. ஒரே வகைப் புற்றுநோயும்கூட அவற்றின் தன்மைகள் பெரியதாகவோ சிறியதாகவோ இருக்கலாம்.

புற்றுநோய் வகைகளும் சிகிச்சை முறைகளும்

பொதுவாக கீமோதெரபி மருந்துகள் 3வாரங்களுக்கு ஒரு முறை (21 நாட்கள்) கொடுக்கப்படும். இதன் காரணம் என்ன வென்றால் கீமோதெரபி மருந்துகளுக்கு எது சாதாரண செல், எது புற்றுநோய் செல் என்று இனம் பிரித்துப் பார்க்கத் தெரியாது. எனவே எல்லா செல்களின் DNAவையும் சிதைத்து விடும். ஆனால், சாதாரண செல்கள் மீண்டும் அவற்றில் இருக்கும் நொதியால், தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும், அதற்குத்தான் இந்த மூன்று வார கால அவகாசம் உதவுகிறது.