UNLEASH THE UNTOLD

Tag: மாபெரும் தாஜ் கனவு

மாபெரும் தாஜ் கனவு-3

தாஜ்மஹாலைப் பற்றி அறிய ஒரு விக்கிபீடியா பதிவு போதும். என் பயணக்கதை தேவையில்லை. ஆனால் என் கண்களின் வழியாக தாஜ்மஹாலின் அழகை ரசித்ததை என்றாவது ஒரு நாள் என் வாழ்வில் பதிவு செய்வேன் என்று சொல்லிக் கொண்டேன்.

மாபெரும் தாஜ் கனவு- 2

மாணவர்கள் சிலரின் சலசலப்பு அருகில் கேட்டது. அனைவரும் கூட்டாக ஒரு சிறைக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். ஆர்வத்தில் நானும் அவர்கள் அருகில் சென்று என்ன என்று பார்த்தேன். அது தன் மகன் ஔரங்கசீப்பால் கைது செய்யப்பட்ட ஷாஜகான் இருந்த சிறை. அங்கு இருந்த ஒரு துளை வழியாக சிறையில் இருந்தபடியே தாஜ்மஹாலை பார்த்தவாறு தன் இறுதி நாட்களை ஷாஜகான் கழித்த வரலாறு என் மனக் கண்ணில் தோன்றியது. கோடிக்கணக்கானவர்களின் மனதை கொள்ளை கொண்ட உலக அதிசயம் ஒன்று அதை உருவாக்கியவனை சிறையில் இருந்து ஒரு துளை வழியே காண வைத்த விதியை என்னவென்று சொல்வது. அரசனே ஆனாலும் அவன் விதியை யாரால் மாற்ற இயலும் .