UNLEASH THE UNTOLD

Tag: இஸ்லாமியப் பெண்கள்

ஆடித் திரிதல் கண்டால் ஆவி தழுவுதடி

“ஆத்து மணலிலே சோறாக்கி அவரைக்காய்ப் பிஞ்சிலே கறிசமைச்சு
மின்வெட்டாம் பூச்சியில் விளக்கேத்தி
வேடிக்கை பாக்கலாம் சோடிப்பெண்ணே” என்ற எங்க வாப்புமாவின் சிரிப்பாணி வழியும் குரல்.



பிள்ளை பெத்த வீடு

அணியாரத் துண்டுகள் காயும் மணம், இஞ்சி தட்டிய மணம்; உள்ளிப்பாலும் காயமும் மொளவாணமும் காய்ச்சிய மணம்; புதிதாய் தாயானவள் மஞ்சளும் எண்ணெயும் சீயக்காயும் தேய்த்து நீராடிய மணம்; இவை எல்லாவற்றுக்கும் மேல் தாய்ப்பாலும் பாலூட்டிய மணம் வெளித் தெரிந்துவிடக்கூடாதெனப் பூசப்பட்ட பவுடரும் சேர்ந்து மணக்கும் பச்சைப் பிள்ளை மணம்; இவை எல்லாம் கலந்து கவிந்த வாசனையோடிருக்கும் ‘பிள்ளை பெத்த வீடு’.