UNLEASH THE UNTOLD

கோகிலா

இன்று பில்கிஸ், நாளை நீங்களோ நானோ?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் இதை இறுதித் தீர்ப்பாக எண்ண இயலவில்லை. ஏனெனில் குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றே இத்தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசு சார்ப்பில் இப்படி ஒரு முடிவு பிற்காலத்தில் எடுக்கப்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அடுத்து வரும் தேர்தலில் சிறைக்குச் சென்றிருக்கும் குற்றவாளிகளின் படத்தைக் காட்டி ஓட்டு கேட்டு அனுதாப அலையில் பிஜேபி ஓட்டுகளை அள்ளினாலும் வியப்பதற்கில்லை. குற்றவாளிகளின் பக்கம் நிற்பவர்கள், “இன்று பில்கிஸ் பனோவுக்கு நடந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று நீதிபதிகள் இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கும்போது தெரிவித்ததை எண்ணிப் பார்க்கவேண்டும்.

டேட்டிங் செயலிகள்

ஆசிய நாடுகளைப் போல பெற்றோர் சம்மதத்துடன் துணைக்கு ஒரு முதிய பெண்ணையும் அழைத்துக் கொண்டு வெளியே டின்னர் சாப்பிடச் சென்ற காலம் மேற்குலக நாடுகளிலும் இருந்தது. பெண்கள் வெளியே வருவதற்கு வாய்ப்பளித்த உலகப் போர் இந்த வழக்கத்தை மாற்றியது. 1896ஆம் ஆண்டில்தான் அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் முதன் முதலில் ‘டேட்டிங்’ என்கிற சாெல்லைப் பயன்படுத்தினார். குடும்பம், சொத்து, கல்யாணம். இம்மூன்றும் இணைந்தே இருந்த காலத்தில் காதலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. ஆணும் பெண்ணும் தனித் தனி நபராக, அவரவர் சம்பாத்தியம் அவரவர் உரிமை எனும் நிலை வளர வளர காதல் மிக அவசியமான ஒன்றாக மாறியது.

பெண்களே இப்பொழுதாவது பேசுங்கள்...

பெரும்பான்மை மக்கள்தாம் வெறுப்பரசியலைத் தடுக்க முடியும். குறிப்பாகப் பெண்கள். எல்லாக் கலவரங்களிலும் பெண்களே அதிகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் ஆண்களின் உடைமை என்கிற எண்ணமே அதன் அடிப்படை. கணவனின் காலைக் கழுவி இன்ஸ்டாவில் போஸ்ட் போடும் பெண்களே சற்றே நிமிர்ந்து பாருங்கள். பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கலாம். அது நிரந்தரம் அல்ல. கண்களைத் திறந்து நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பாருங்கள். வாயைத் திறந்து பேசுங்கள். யாரோ பெயர் தெரியாத மணிப்பூர் பெண்ணுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் நம் சந்ததிகளுக்ககாவும்.

தொழில்நுட்பத்தின் பொற்காலமா ஜெனரேட்டிவ் ஏஐ?

மனிதர் செய்ய மிச்சம் என்னதான் இருக்கிறது என்கிற கேள்வி எழாமல் இல்லை. இன்னும் அதிக அறிவு தேவைப்படும் வேலைகளை மனிதர்கள் செய்வார்கள் என்று பதில் கூறுகிறார்கள். செல்லிடப்பேசிகள் வந்து எஸ்டிடி பூத்களை ஒழித்தது போல சில வேலைகள் வழக்கொழியும். அலார்ம் க்ளாக் கண்டுபிடிக்கும் முன்பு காலையில் எழுப்பிவிடுவதுகூட ஒரு வேலையாக இருந்ததாம். வேலை இழப்பைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ப்ராம்ட் என்ஜினியர், ஏஐ ட்ரெயினர், பிக் டேட்டா என்ஜினியர், எம்எல் என்ஜினியர், டேட்டா சயின்டிஸ்ட் என உருவாகப்போகும் ஏகப்பட்ட வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்த நம்மைத் தயார் செய்துகொள்ளலாம்.

குடும்பத் தலைவிகளுக்கு மாத ஊதியம்

பெண்கள் வேலைக்குப் போவது குறிப்பாக ஆசிய நாடுகளில்தாம் குறைவாக இருக்கிறது. குடும்பம், கலாச்சாரம், மதம், சமய நம்பிக்கைகள் காரணமாக இருக்கிறது. சொல்லப்போனால் பெண்களேகூட என் குழந்தையை, குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதில் எனக்கென்ன சிரமம், என் கடமை, பெருமை என்றெல்லாம் பேசுவதுண்டு. 16 வயதினிலே படத்தில் வரும் ஜோதிகா வேலைக்குப் போய் சம்பாதிப்பவராக இருந்தாலும்கூட கணவரும் மகளும் மதிக்காமல் இருப்பது போல காட்சிகள் இருக்கும். பல குடும்பத்தில் நடக்கும் உண்மை நிகழ்வு இது. பெண்களை சமூக ஊடகங்களிலும் வீடுகளிலும் மட்டம் தட்டிப் பேசுவதை ஆண்கள் நகைச்சுவை என்று நம்புகிறார்கள். இந்த நிலையில் வீட்டு வேலை மட்டுமே செய்யும் ஒரு பெண் சுயமரியாதையுடன் வாழ்வது என்பது ஆண்கள், பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ளது என்று ஒப்புக்கொள்வதைப் போல குறைவான சாத்தியமுள்ள விஷயம்.