ஏழை படும் பாடு
அம்பலவாணனிடம் பணம் பறிக்கும் நோக்கில் நாகியின் தம்பியின் கூட்டம், அவரைக் கட்டி வைக்கிறது. அஞ்சலை, காவல் துறைக்குத் தகவல் கொடுக்க, வருபவர், நமது ஜாவர்தான். இப்போது அம்பலவாணன் யார் என்பது அவருக்குத் தெரிகிறது. இதை அறிந்த அம்பலவாணன், லட்சுமியுடன் ஊரைவிட்டுப் போக நினைக்கிறார். அப்போது, உமாகாந்தன், தான் போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாகவும், தனக்கு என்ன நேர்ந்தாலும் பின்வாங்கப் போவதில்லை என்றும் லட்சுமிக்கு எழுதி அனுப்பிய கடிதம், அம்பலவாணன் கையில் கிடைக்க, அவர் போராட்டக் களத்திற்குச் செல்கிறார். அங்கு, போராட்டக்காரர்களிடம், ஜாவர் சிக்கி இருப்பதைப் பார்க்கிறார். இன்ஸ்பெக்டர் ஜாவரை அவர்கள் கொலை செய்ய துப்பாக்கியை எடுக்கும் போது, அம்பலவாணர் சென்று காப்பாற்றிச் செல்கிறார்.