UNLEASH THE UNTOLD

Tag: mathottam

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் மாதோட்டம்!

அன்றொரு நாள், மாதோட்டத்தின் பொற்காலத்தில் பதினோராம் நூற்றாண்டுக்கு முன்னதான இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டுமின்றி தென்னிந்திய கடல் வணிகர்கள் தங்கள் சரக்குகளை சீனாவுக்குக் கொண்டு செல்லும்போதும் இடைப்பட்டுத் தங்கிச் செல்லும் துறைமுகமாகத்தான் மாதோட்டம் விளங்கியது. மிகச் சிறந்த வர்த்தக நகரமாக உருவெடுத்தது. ஈழத்து உணவு வகைகள், முத்து பவளம், நவரத்தினங்கள், யானை, யானைத் தந்தம், மயில் தோகை, மிளகு, கறுவாய், ஏலம் போன்ற பொருள்கள் மாதோட்ட துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழில் நடந்திருக்கிறது. பல நாடுகளிலிருந்தும் வர்த்தகர்கள் இங்கு வந்துகூடினர், உலகின் பல பாகங்களிலிருந்தும் பண்டங்கள் மாதோட்டத்தில் வந்து குவிந்தன. செல்வம் பெருகியது, மக்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்கிறார் கிரேக்க அறிஞர் கொஸ்மன் இண்டிக்கோ பிளஸ்தேஸ் தனது நூலில்.