UNLEASH THE UNTOLD

Tag: Marudhanattu Ilavarasi

மருதநாட்டு இளவரசி

இளவரசியைத் தன் நாட்டிற்குக் கொண்டு செல்கிறான் ருத்ரன். முதலில் காண்டீபன் மறுத்தாலும், பின் சென்று காப்பாறுகிறார். இருவரும் காளிங்கனின் வீட்டிற்கு அடைக்கலமாக வருகிறார்கள். அப்போது அங்கு வந்த துர்ஜெயன், அறையைப் பூட்டிவிட்டுச் செல்கிறான். சன்னல் கம்பியை வளைத்து இருவரும் தப்பி விடுகிறார்கள். துர்ஜெயன் குழு துரத்திச் செல்கிறது. இளவரசி, காளி கோயிலுக்குள் சென்றுவிடுகிறார். ஆண்கள் உள்ளே போக முடியாது என்ற கட்டுப்பாடு இருப்பதால், இவர்களால் உள்ளே நுழைவு முடியவில்லை. ஆனால், அருகில் ஒரு சுரங்க வழி இருப்பதைத் தற்செயலாகப் பார்க்கிறார்கள். அதன் வழியே உள்ளே செல்கிறார்கள். நாயகனுக்கு மட்டும் அந்த தற்செயல் வழி தெரியாமலா போய்விடும். அவரும் உள்ளே போகிறார்.