களப்போராளி சாஜிதா
சமூகம் அல்லல்படுவதையும், அழிவதையும் கண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்? அவர்கள் எந்த மதநம்பிக்கை உடையவராக இருந்தாலும் அவர்களும் எங்கள் உடன்பிறப்புகள் தானே?. கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்டதைக் கண்டு என் மனம் துயரத்தால் நிரம்பியது. ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.
