UNLEASH THE UNTOLD

Tag: ஜென்னி மார்க்சின் கடிதங்கள்

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்-3

அந்த அயோக்கியன் என்ன பண்ணினான் தெரியுமா?அவன் எனக்கு நன்றி சொல்லிவிட்டு எல்லாவற்றையும் பாக்கெட்டில் போட்டுக்கோண்டு எனது ஆறு பென்னிகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போய் விட்டான். நான் இப்பொழுது அதற்காக ஏங்க வேண்டியதாகிவிட்டது. நான் இன்னும் அதற்காக அவனை திட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவன் என்னை கண்டுகொண்டதாகவோ, என் பேதலிப்பை உணர்ந்தவனாகவோ தெரியவில்லை. அம்மாவும் எனக்கு ஆறுதல் சொல்லவில்லை. சுருக்கமாகச்சொல்லவேண்டுமானால் நல்ல பொருள்களெல்லாம் போனது மாதிரி இந்த ஆறு பென்னியும் போய்விட்டது. அது ஒரு ஏமாற்றமே!

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்-2

என் இனிய இளம் கார்ல், ஒன்றுமட்டும் எப்போதும் நினைவில் இருக்கட்டும். இங்கு இந்த வீட்டில் உன்னுடைய இந்த இனிய இதயம் உன்னையே சார்ந்து உன் மீது நம்பிக்கையுடனும், துயரப்பட்டும் முற்றிலும் உன் எதிர்காலத்தை நோக்கியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அன்பே, அன்புச்சுவையான இதயமே, நான் மறுபடியும் எப்படியாவது உன்னை சந்திக்க விழைகிறேன்.
துரதிர்ஷ்டவசமாக நான் இன்னும் அந்த நாளை குறித்துக்கொள்ளவும் இல்லை, குறிக்கவும் முடியவில்லை.