UNLEASH THE UNTOLD

Tag: mother nature

இயற்கை என்பது அன்னையா, தந்தையா?

முதலாவதாக, ஒரு தாய் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் தனது பிரச்னைகளைத் தானே சரிசெய்துகொள்வதைப் போல, இயற்கையும் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பது. சூழல் சீர்குலையும்போது அதை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வரும் தன்மை இயற்கையில் உண்டு என்பது உண்மைதான், ஆனால் மனிதனால் ஏற்படும் அழிவின் விகிதத்துக்கு இயற்கையின் தன்மீட்சியால் எந்த வகையிலும் ஈடு கொடுக்க முடியாது. தவிர, குற்ற உணர்வின்றி, விளைவுகளைப் பற்றிய கவலை இன்றி மனிதர்கள் தொடர்ந்து இயற்கையை அழிப்பதையும் இந்தக் கோணம் அனுமதிக்கிறது.