UNLEASH THE UNTOLD

Tag: Gomathi Subramaniyam

சுதந்திர வானில் பறந்தவர்!

அப்பாவின் கதைகளைப் படித்தும் வானொலி நாடகங்களைக் கேட்டும் ரசித்ததோடு, ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஒரு பெண்ணின் கோணத்தில் சில தர்க்கங்களையும் எடுத்துரைத்ததை ரசித்துப் பாராட்டும் விதமாக பார்க்கர் பேனாவில் ‘கோமதி சுப்பிரமணியம்’ என்று பெயர்பொறித்து ‘நீயும் எழுதத்தொடங்கு’ என அம்மாவிற்கு அந்தப் பேனாவைக் கொடுத்திருக்கிறார் அப்பா. திருமணத்திற்குப் பிறகு அப்பாவின் ஊக்கத்தோடு தன் முதல் கதையை எழுத ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு படிப்படியாக அடுத்தடுத்து கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார் அம்மா.