என் மனைவி
மனைவி செல்லம் வெளியில் சென்று வரும்போது நல்லபடி அலங்காரம் செய்து கொண்டு செல்வதில் இவருக்குச் சந்தேகம். செல்லம் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிடப் போன நேரத்தில் அவரது வீட்டு வேலைக்காரப் பெண்ணின் தோழி சுவாதி வருகிறார். சுவாதியின் முதலாளி அம்மா, ஒரு மாதம் உடுத்திய சேலையை மறுமாதம் இவரிடம் கொடுத்துவிடுகிறார். பதினைந்து ரூபாய் விலையில் மூக்குத்தி வாங்கிக் கொடுத்து இருக்கிறார். இப்பெண்ணும் விலை மலிவான நகைகள் வாங்கிப் போட்டு சினிமா நடிகை போல வந்திருக்கிறார். கோயிலில் இருந்து வந்து பார்த்த செல்லத்திற்கு, இவற்றை எல்லாம் கணவர்தான் வாங்கிக் கொடுத்திருப்பாரோ என்று சந்தேகம். சுவாதியின் முதலாளி மதுரம் செல்லத்திற்கு ஏற்கெனவே தெரிந்தவர் என்பதால், சந்தேகத்தை நிவர்த்தி செய்ய அவருக்குக் கடிதம் எழுதுகிறார்.