UNLEASH THE UNTOLD

ஆர். சங்கீதா

நினைவை விட்டு அகலாத சுற்றுலா!

மதியம் உணவு நேரம் வந்தது. சிலர் தூக்குவாளியில் சாம்பார் சாதமும் சிலர் புளிச் சாதமும் சிலர் டிபனும் மதிய உணவு எடுத்து வந்திருந்தார்கள். எங்கள் வீட்டில் எப்பவும் இலையில் பொட்டலம் கட்டிதான் கொடுத்து அனுப்புவார்கள். அனைவரும் பகிர்ந்து மதிய உணவை முடித்தோம். உண்ட களைப்பு தூக்கமும் வர ஆரம்பித்தது. ஆலமர நிழலில் அதன் காற்றின் மகிமையும் சேர்ந்து கொண்டதால்.

குழந்தைகளை பள்ளி சுற்றுலாவுக்கு அனுப்புங்கள்!

அன்று பள்ளி முடித்து வந்தும், அடுத்த வாரம் ஒருநாள் வெளியே கூட்டிட்டுப் போகிறார்கள் என்று அப்பாவிடம் சொன்னேன். பெரும்பாலான நாட்கள் பள்ளி முடிந்து வரும் போது அப்பாதான் வீட்டில் இருந்து சிற்றுண்டி, பால் தயார் செய்து தருவார். அப்படி இல்லை என்றால் பக்கத்து வீட்டில் சாவி இருக்கும். நானும் அக்காவும் அங்கே இருப்போம். அப்பா, அம்மா வந்ததும் பேசிட்டுச் சொல்றேன் என்றார். இருவரும் போகலாம் என்று அனுமதி கொடுத்ததும் மறுநாள் பள்ளியில் என் பெயர் கொடுத்து விட்டேன்.

பயம் ஒரு தடையல்ல...

மலைக்கோட்டை உச்சியில் பழங்காலப் புழக்கத்தில் இல்லாத பராமரிப்பு அற்ற கோயில், துணை மண்டபங்களும் இருந்தன. ஆங்காங்கே குடும்பமாகத் தோழர்கள் குழுக்களாக நின்றும் அமர்ந்தும் இயற்கையை ரசித்துக்கொண்டும் இளசுகள் ஓரத்தில் நின்று திண்டுக்கல் நகரத்தைப் பார்த்துக் கொண்டும் சிறுவர்கள் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள்.