UNLEASH THE UNTOLD

ராம்குமார்

அறியாத மனசு... புரியாத வயசு...

காயத்திரி அத்தைக்குப் பக்கத்து வீடு. காயத்திரியும் செல்வனும் சிறு வயதில் இருந்தே நட்பாகப் பழகியவர்கள். செல்வனுக்குக் காதல் அரும்பி தன் காதலை முதலில் சொல்லியிருக்கிறான். ஒரு சில வருடங்கள் கழித்து காயத்திரி சம்மதம் சொல்ல, தற்போது வீட்டிலும் சொல்லியிருக்கிறான் செல்வன்.

'அரேன்ஜ்டு மேரேஜ்' பரிதாபங்கள்... 2 

ஆறுமுகம் மாமாதான் ஆரம்பித்தார். “நான் பையனோட தாய் மாமா. இவரு பையனோட அப்பா, மேலாளர் ஆக இருந்து பணி ஓய்வு பெற்றுவிட்டார். இவங்க பையனோட அம்மா. இல்லத்தரசி. பொண்ணு பொறியியல் முதல் வருசம் படிக்குது. பையன் மூத்தவன், பொண்ணு இரண்டாவது. இவங்க என் இரண்டாவது தங்கை. இவன் அவங்க மகன். பொறியியல் கடைசி வருடம் படிக்கிறான்…” இப்படி எல்லா உறவுகளையும் கணீரென்ற உரத்த குரலில் அறிமுகப்படுத்தி வைத்தார் ஆறுமுகம் மாமா.

ஏற்பாட்டுத் திருமணப் பரிதாபங்கள் - பெண் பார்க்கும் படலம்!

ஒரே சாதிக்குள் வரன் என்று தேட ஆரம்பித்த போதே திருமண வயதில் உள்ள 98 சதவீத பெண்களை நிராகரித்து விட்டாகியது. மீதி உள்ள பெண்களில் ஜாதகம் பொருந்தி, வர்க்கம் பொருந்தி , இரு குடும்பத்திற்கும் பரஸ்பரம் பிடித்து, சம்பந்தபட்ட இருவருக்கும் பிடித்து… நிற்க… நடுவில் உறவினர்களை மறந்துவிட்டோம். இப்படியான ஒரு கடின பாதையில் பயணித்துக் கொண்டிருந்தான் ஆதி. அப்பயணதில் அவன் முன்தலை முடிகள் பல கோபித்துக் கொண்டு வர மறுத்து விடை பெற்று இருந்தன.