UNLEASH THE UNTOLD

செம்மலர் செல்வி

நட்சத்திரம் நகர்கிறது - அம்பேத்கரிய பெண்களுக்கு அவமரியாதை

ஓர் அறிவுள்ள, புத்திசாலிப் பெண்ணாக இருக்கும் ரெனே, கருத்து வேறுபாடுகள் உள்ள ஓர் ஆணுடன் தரம் தாழ்ந்து பாலியல் சுகத்தைத் தர ஏன் நினைக்கிறாள்? இனியன், தன்னைப் பாலியல் சுரண்டல் செய்து ஏமாற்றுகிறான் என்பதைக்கூட அறிந்துகொள்ளும் திறனற்ற பெண்ணா ரெனே? இது தலித் பெண்ணியம் குறித்து மிகவும் குறைத்து மதிப்பிடச் செய்கிறது. ஒரு பாலியல் தேடலுக்காக எந்தவொரு தலித் அம்பேத்கரிய பெண்ணும் தனது சுயமதிப்பையும் சுயமரியாதையும் சமரசம் செய்து கொள்ளவே மாட்டாள்.