UNLEASH THE UNTOLD

Tag: dupatta podunga thozhi

பெண் விடுதலைக்கான நூல்

ஒருவர் சுயபரிவுடன் இருந்தால்தான் சக்தியோடு இயங்க முடியும் என்கிற கோணம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. சுயபரிவு இன்மைதான் பெண்களைச் சுய பச்சாதாபத்தில் தள்ளி சக்தி இல்லாதவர்களாக மாற்றுகிறது. கற்பு என்னும் ஒற்றைச் சொல்லைக் கொண்டே பெண்களின் புத்தி மழுக்கடிக்கப்பட்டு, உணர்வுகள் தூண்டப்பட்டு, அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்று சாடுகிறார் ஆசிரியர். பெண்களின் சம்பாத்தியம், தனித்து வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது இவையெல்லாம் பெண்களின் உரிமை என்கிறார்.