UNLEASH THE UNTOLD

பார்த்ததும் படித்ததும்

பாறையில் படிந்த ஆதித்தடங்கள்

பொதுவுடமை சித்தாந்தத்தில் ஈடுபாடுகொண்ட மணலூர் மணியம்மை என்னை வெகுவாக பிரமிக்க வைத்த சென்ற நூற்றாண்டுப் போராளிப் பெண்ணாக ஒளிர்கிறார். பால்ய விதவையான மணியம்மா சிலம்பம் பயின்று, சைக்கிள் ஓட்டக் கற்று, தன் முடியை ‘கிராப்’ வெட்டிக்கொண்டதோடு நில்லாமல், வேட்டி, அரைக்கை வைத்த கதர் சட்டை, சிவப்புத் துண்டோடு வலம் வந்திருக்கிறார் மக்களுக்காக.