UNLEASH THE UNTOLD

மொழிபெயர்ப்பு கதைகள்

தோல்வி

பெண்ணியம் குறித்து அலசி ஆராய்ந்து அவன் எழுதியிருந்த புத்தகம் ஒன்று, மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.  மேலும் பெண்களின் பிரச்சினைகள் குறித்து அவன் வெளியிட்டிருந்த ஒரு கவிதைத் தொகுப்பு நூலுக்கும் மிகச்சிறப்பான அங்கீகாரம் கிடைத்திருந்தது. பெண்கள் தங்களிடம் மறைந்து கிடக்கும் வலிமையை மீட்டெடுத்துக் கொண்டு தங்களை மேலும் உயர்த்திக் கொள்ள அந்த நூல் உதவுமென்று மதிப்பிடப்பட்டது.  மணிப்பூரில் உள்ள சில இலக்கிய அமைப்புகள் அவனது அந்தப் படைப்புக்கு விருதுகள் தந்து கௌரவித்தபடி, ஒரு முன்னணிப் பெண்ணியவாதியாக அவனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தன.