பெரியாச்சி

திடீரென ஏதோ நினைத்துக்கொண்ட ஆத்தா மருமகளிடம் *பல்லுக்கொழுக்கட்ட செஞ்சு கெங்கய நெனச்சி தண்ணியள்ளி ஊத்து” என்றாள். சோகமா என்றெல்லாம் புலப்படவில்லை அந்த முகத்தில். அது என்ன எல்லாத்தயும் விட்டுட்டு பல்லு கொழுக்கட்ட படையலு? தோன்றிய கேள்வியை மனசுக்குள்ளேயே புதைத்தாள்.