அம்மாவின் கொடுமைகள்

க்ளாஸ் முடிஞ்சவுடனே, ஸ்கூட்டரில் போய்க்கொண்டு இருக்கும்போது, வழக்கம்போல ‘தண்ணி குடிச்சியா’ என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும் வண்டியை நிறுத்தி,
‘நீ கீழ இறங்கு’ ‘…. …. ….. ’
‘இப்ப இறங்குறியா இல்லையா’ என்றார்.
நான் இறங்கிவிட்டேன்.
‘வீட்டிற்கு நடந்து தானாகவே நீ வா’ என்று சொல்லி வேகமாக ஸ்கூட்டரைக் கிளப்பினார்.