UNLEASH THE UNTOLD

சபிண்ட உறவுகள் பாவமா?

என்னதான் பழக்க வழக்கம் என்று சொன்னாலும் பண்டைய இந்தியாவில் குடும்பச் சொத்துகள் வெளியே செல்லக் கூடாது என்பதற்காகவே இத்தகைய திருமணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதத் தோன்றுகிறது. ஏனெனில் இத்தகைய உறவுவழித் திருமணங்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. நெருங்கிய உறவுகள் ஏழ்மை நிலையில் இருந்தால் அங்கு திருமண உறவுகள் ஏற்படுவதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அறிவில் பெருகிய சமூகம் ஆரோக்கியத்தில்?

மரபணு பிறழ்வின் காரணமாகச் சிலரின் உடலில் தேவையற்ற மிக அதிகமான செல்கள் உருவாகி, உடலின் ஓரிடத்தில் கட்டியாகப் படியும். அந்தக் கட்டியில் வலி இருக்காது. கட்டிகள் பரவிக்கொண்டே போகும், பெரிதாகிக் கொண்டே போகும். அந்த சைலன்ட் கில்லர்தான் கேன்சர்.

எது அழகு?

இன்றைய குழந்தைகளிடம் அழகு குறித்த புரிதலையும், வியாபார நோக்கத்தில் அழகு குறித்த தவறான வதந்திகளை உருவாக்கி வைத்திருக்கும் இந்தச் சமூகத்தையும்  குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

நகர்தல் என்றும் நன்று

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீரே என்னவர் என வாழ்ந்தவர்கள்தாம் இவர்கள் எல்லாரும். இவ்வளவு ஏன் காதலித்துத் திருமணம் செய்து, நல்லபடி வாழ்ந்து மணமுறிவு ஏற்பட்டு வாழ்பவர்கள் இல்லையா? வேறு திருமணமும் அவர்கள் செய்துகொள்வது இல்லையா? வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, இணையர் இறந்து வேறு திருமணம் செய்து நிறைவாக வாழ்பவர்களை நீங்கள் பார்த்ததில்லையா? இவர்களால் எல்லாம், கடந்த காலத்தை மறந்து வாழ முடியும்போது, உங்களால் ஏன் முடியாது?

திகம்பர சாமியார்

‘மைசூர்ல மழை வருது, காவேரியில் தண்ணி வருது. அதுக்கு வரி. வித்தா வரி; வாங்கினா வரி; காபி குடிச்சா வரி; வெத்தலையைப் போட்டா போயிலைக்கு வரி; சுருட்ட குடிச்சா நெருப்பெட்டிக்கு வரி;. கொஞ்ச நேரம் தமாஷா பொழுதைப் போக்கிட்டு வரலாமுன்னா அதுக்கும் தமாஷா வரி’ என வரி குறித்து விமரிசனம் வருகிறது.  

துயரத்திலிருந்து என்னை மீட்டது எழுத்து! - ஆர். பொன்னம்மாள்

எனக்கு 19 வயது இருக்கும் போது தமிழ்நாடு என்கிற பத்திரிகை நடத்திய ஒரு கதைப் போட்டியின் அறிவிப்பைப் பார்த்தேன். ஒரு கதை எழுதி போட்டிக்கு அனுப்பினேன். இரட்டைப்பரிசு எனும் அந்தக் கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. அதைப் பார்த்ததும் வானில் இறக்கைக் கட்டிப் பறப்பது போல் இருந்தது. அந்தக் கதைக்குப் பத்து ரூபாய் பரிசாகக் கொடுத்தார்கள். அந்த நாட்களில் அது பெரிய பணம். அதுவும் எம்.எஸ். சுப்புலட்சுமி கையால் எனக்கு அந்தப் பரிசு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆக எனக்குமே இரட்டைப்பரிசுதான்.

'கிராப் கட்’ என்றாலே ஆண்கள்தாமா?

ஆண்கள் நீளமாக முடி வைத்திருந்தால் மேம் என்றா கூப்பிடுகிறார்கள்? கூப்பிடுவதுகூட பரவாயில்லை. கிராப் கட் செய்து இருந்தால் அது ஆண்தான் என்று எப்படி முத்திரை குத்த முடியும்?

இன்று பில்கிஸ், நாளை நீங்களோ நானோ?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் இதை இறுதித் தீர்ப்பாக எண்ண இயலவில்லை. ஏனெனில் குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றே இத்தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசு சார்ப்பில் இப்படி ஒரு முடிவு பிற்காலத்தில் எடுக்கப்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அடுத்து வரும் தேர்தலில் சிறைக்குச் சென்றிருக்கும் குற்றவாளிகளின் படத்தைக் காட்டி ஓட்டு கேட்டு அனுதாப அலையில் பிஜேபி ஓட்டுகளை அள்ளினாலும் வியப்பதற்கில்லை. குற்றவாளிகளின் பக்கம் நிற்பவர்கள், “இன்று பில்கிஸ் பனோவுக்கு நடந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று நீதிபதிகள் இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கும்போது தெரிவித்ததை எண்ணிப் பார்க்கவேண்டும்.

யூன் ஃபாஸ்ஸயின்  அமைதிக்கான தேடல்

அந்த வெளிச்சம், இசை, நீர், உடைகள் – இவை எல்லாவற்றையும் விவரிக்க ஒரு வார்த்தையே என் மனதில் உதித்தது- ‘புனித யாத்திரை.’ வாழும் எழுத்தாளர் இத்தகைய மரியாதையுடன் நடத்தப்படுவதை வெகு அரிதாகவே காண இயலும்.

மூன்றாம் மும்மாதம்

ஆரோக்கியமான குழந்தை எனில் 3 கிலோவிற்கு மேல் இருக்கும் தற்போது 50 செமீ நீளம் இருக்கும். 40வது வாரத்தில் இயல்பாகப் பிரசவவலி ஏற்படும். வெளியே வரவும், வெளியே வந்தால் தனித்து சுவாசிக்கவும் தனித்துக் கழிவுகளை அகற்றவும் குழந்தையால் முடியும். அதனால் 100% தகுதி அடைந்து குழந்தை பிறக்கிறது இவ்வாரத்தில்.